அறுபடை வீடுகள்.
மிகப்பழமை வாய்ந்த தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியம் தமிழக நிலப்பரப்பைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு வகையாகப் பிரிக்கிறது. இவற்றில் மலையும்மலையைச் சார்ந்த பகுதியாகிய குறிஞ்சி நிலத்திற்குரிய கடவுளே முருகப்பெருமான். முருகப்பெருமான் எல்லா உலகங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளவன் என்றாலும், அவன் சிறப்பாகவாழும் இடங்கள் ஆறு படைவீடுகளாகும்.
முதற்படை வீடு
பழநி - ஸ்ரீபழனி ஆண்டவர்
சென்னையிலிருந்து 445 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. திருவாவினன்குடி, சித்தன்வாழ்வு, போதினி போன்ற பெயர்களும் உண்டு. போதினி என்ற பெயர் மருவி பழநி என்றானது. இங்குள்ள பழநிஆண்டவரின் சிலை நவ பாஷாணங்களால் ஆனது. இங்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தம் மிகவும் புகழ் பெற்றது.
பழநி:
ஆறுபடைவீடுகளில் முதலாவதாகும். ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் தன் பெற்றோர்களிடம்
கோபம்கொண்டு முருகன் ஆண்டியின் கோலத்தில் நிற்கும் இடமே பழநி. பழநிமைலயில் உள்ள முருகனின் சிலை நவபாஷானத்தால் ஆனது.அதனால்தான் அந்த முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால், பஞ்சாமிர்தம், விபூதி ஆகியவற்றை உட்கொண்டால் உடல் நலம்பெறும் என்று நம்பப்படுகிறது.
இரண்டாம்படை வீடு
திருச்செந்தூர் - ஸ்ரீபாலசுப்பிரமணியசுவாமி
சென்னையிலிருந்து சுமார் 650 கி.மீ தூரத்தில் தூத்துக்குடி அருகில் அமைந்துள்ளாது. கடற்கரை ஓரமாக அமைந்த்துள்ளது. திருச்சிரல்வாய், வீராகுபட்டணம், ஜெயந்திபுரம் போன்ற வேறு சில பெயர்களும் உண்டு. இங்கு வழங்கப்படும் பன்னீஇலை வீபூதி மிகவும் புகழ்பெற்றது.
திருச்செந்தூர்:
கடல் அலை 'ஓம்' என்ற ரீங்காரத்துடன் கரை மோதும் 'அலைவாய்'என்னும் திருச்செந்தூர் முருகன், சூரபத்மன் என்ற அசுரனுடன் போரிட்டு வென்ற இடமாகும். சூரபத்மன் வர்களையும்,இந்திரனையும், அவன் மனைவியையும் சிறை தேவர்களையும்,இந்திரனையும், அவன் மனைவியையும் சிறை செய்து கொடுமை செய்தான். அவர்களைக் காப்பாற்ற முருகன் சிவபெருமானின்நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றினார். சூரபத்மனுடன் முருகன் போர்புரிந்த இடமே திருச்செந்தூர். அவர் போர்புரிந்த காலம்கார்த்திகை மாதம் சஷ்டியாகும். அதனால்தான் கார்த்திகை மாதம் சஷ்டியின் போது விரதம் இருந்து முருகனை வழிபடுகின்றனர்.போரின் இறுதியில் சூரபத்மன் பெரியமரமாக நிற்க முருகன் தன் தாய் தந்த சக்திவேலால் மரத்தைப் பிளக்கிறார். அதில் ஒருபாதிமயில் ஆகிறது. மற்றொரு பாதி சேவலாகிறது. மயிலைத் தன் வாகனமாகவும், சேவலைத் தன் கொடியாகவும் ஏற்றுக் கொள்கிறார்.
மூன்றாம்படை வீடு
திருப்பரங்குன்றம் - ஸ்ரீசுப்ரமணியசுவாமி
சென்னையிலிருந்து சுமார் 461 கி.மீ. தூரத்தில் மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீசுப்ரமணியசுவாமி கல்யாண கோலத்துடன் காட்சி தருகிறார்.
திருப்பரங்குன்றம்:
தேவேந்திரனையும், தேவர்களையும் சிறை மீட்டதற்குநன்றிக் கடனாக இந்திரன் தன் மகள் தெய்வானையைமுருகனுக்குத் திருமணம் செய்துகொடுக்கிறான்.முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடந்த இடம்திருப்பரங்குன்றம். முருகனுக்கும் சூரபத்மனுக்கும் போர் முடிந்து முருகன் போரில் வெற்றி பெற்ற மறுநாள்இத்தெய்வீகத்திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
நான்காம்படை வீடு
சுவாமிமலை - ஸ்ரீசுவாமிநாதசுவாமி
சென்னையிலிருந்து சுமார் 309 கி.மீ. தூரத்தில் கும்பகோணம் அருகில் அமைந்துள்ளது. திருவேரகம், குருமலை, தாத்ரீகரீ, சுந்தராசலம் போன்ற பெயர்களும் உண்டு.
சுவாமிமலை:
தந்தைக்குப் பாடம் சொன்ன இடம் சுவாமி மலை.பிரணவமந்திரத்திற்குப் பொருள் தெரியாத பிரம்மனை முருகன் சிறையில் அடைக்கிறார். இதைக் கேள்வியுற்ற சிவபெருமான், எனக்கும்,பிரம்மாவுக்கும் கூடத் தெரியாத பிரணவமந்திரத்தின் பொருள் உனக்குத் தெரியுமா? என்று கேட்கிறார். அதன்படி உபதேசிப்பவன்குரு, கேட்பவன் சீடன் என்ற முறையில் முருகன் ஆசனத்தில் அமர, அவர் கீழ் சிவன் அமர்ந்து தன் கரத்தால் வாய் பொத்தி உபதேசம்கேட்ட இடமே சுவாமிமலை.
ஐந்தாம்படை வீடு
திருத்தணி - ஸ்ரீபாலசுப்பிரமணியசுவாமி
சென்னையிலிருந்து 80 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. சீபுரணகிரி, கணிகாசலம், மூவாத்திரி , அண்ணகாத்திரி, செருத்தணி போன்ற பெயர்களும் உண்டு. 400 அடி உயர மலை 365 படிகள்.
திருத்தணி:
முருகன் வேடர்குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல்மணம் புரிந்துகொண்ட இடமே திருத்தணி. வள்ளியின் தந்தை நம்பிராஜன் முருகனுக்கு வள்ளியைத் திருமணம்செய்து கொடுக்க மறுத்து, முருகனுடன் போரிட்டு மடிகிறான். பின் முருகன் வள்ளியைத் திருமணம் செய்துகொள்கிறான். முருகன் போரிட்ட கோபம் தணிய நின்ற மலையே தணிகை மலை ஆகும். அதுவே திருத்தணி என்றுபோற்றப்படுகிறது.
ஆறாவதுபடை வீடு
பழமுதிர்ச்சோலை - சோலைமலை முருகன்
சென்னையிலிருந்து சுமார் 461 கி.மீ. தூரத்தில் மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இதற்கு திருமலிருஞ்சோலை குலமலை கொற்றை மலை என்ற பெயர்களும் உண்டு. ஒளவைபாட்டிக்கு நாவல்பழத்தை உதிர்த்து கொடுத்ததால் பழமுதிர்ச்சோலை என்று பெயர் பெற்றது.
பழமுதிர்ச்சோலை:
நக்கீரர், 'இழுமென இழிதரும் அருவிப்பழமுதிர்ச்சோலை கிழவோனே' என்றுமுருகனின் ஆறாவது படைவீடாகப்பழமுதிர்ச்சோலையைக் கூறித் திருமுருகாற்றுப் படையை நிறைவு செய்கிறார். குறிஞ்சிக் கடவுளாகிய முருகன்வயோதிகனாகத் தோன்றி நக்கீரனுக்குக் காட்சியளித்த இடம் பழமுதிர்ச்சோலையாகும்.